Donate us Chat on WhatsApp

Blog

Delve deeper into the stories behind our work. Our blog features insightful articles, personal accounts, and success stories that showcase the real impact of our programs on individuals and communities. Join the conversation, share your thoughts, and stay inspired by the transformative journeys we share.

Back to Blog

சோதனை கண்டு சோர்கொள்ளல் ஆகாது! – Part 1

Whitecane Stories
சோதனை கண்டு சோர்கொள்ளல் ஆகாது! – Part 1

அன்னையர் தினத்தன்று அறிமுகப்படுத்துகிறோம் #வெண்பிரம்புகதைகள் !

சோதனை கண்டு சோர்கொள்ளல் ஆகாது!

பகுதி 1: வாழ்க்கை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதில்லை. சில மனிதர்களுக்கு நன்றாகவும், சிலருக்கு சோதனைகளும் அவை பிற்காலத்தில் சாதனைகளாக மாறுவதும் உண்டு. அந்த வகையில் நான் இரண்டாவது வகையை சேர்ந்தவள்.

என் பெயர் கிருஷ்ண பிரஹண்யா. என் சொந்த ஊர் ஆவுடையார் கோவில். நான் பிறந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்று பின் சென்னையிலுள்ள மீனாட்சிக் கல்லூரியில் பி.எஸ்ஸியும், பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பரத நாட்டியத்தில் யு.ஜி மற்றும் பி.ஜியும் பயின்று எம்.ஏ., பட்டம் பெற்றேன். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும்போது நான் கண்ணாடியை அணிந்து கொண்டுதான் சைக்கிளில் செல்வேன். நாளடைவில் என் கண்களில் பார்வைத்திறன் குறையத் தொடங்கியது. இதற்கிடையில் நடனப் பள்ளியில் பல மாணவிகளுக்கு நடனமும் கற்று கொடுத்து பின் அவர்களுக்கு அரங்கேற்றம்வரை சிறப்பாக கற்றுத்தந்தேன். எனக்கு 20 வயது இருக்கும்பொழுது என் கண்பார்வைத்திறன் மேலும் குறைய தொடங்கியதால் 2013ம் ஆண்டு சங்கரா கண் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோதுதான் எனக்கு “Retinitis pigmentosa” என்ற பார்வைகுறைபாடு உள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

நான் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை அதற்கு சிகிச்சையும் எடுக்கவில்லை. எனினும், நான் தளராமல் நடன வகுப்பு கற்றுத் தந்தேன். நாளடைவில் என் பார்வைத்திறன் தெளிவில்லாமல் தெரியத் தொடங்கியது. முதலில் “Photo phobia” வெளிச்சத்தைப் பார்த்தால் கண் எரிச்சல் ,வலி மற்றும் கண் கூசுதல் என்ற நிலை ஏற்பட்டது, எனினும் முயற்சியை விடாமல்

என் வேலைகளை நானே செய்து கொண்டிருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடனப் பள்ளியை விட்டு விலகினேன். பின் 2015ம் வருடம் என் வீட்டில் எனக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.

என் அப்பா அப்போது சி.டீ.ஒ.,வாக சென்னையில் பணியிருந்ததால் சீக்கிரத்தில் திருமணத்தை நடத்திவிடலாம் என்றார். என் அண்ணாவும் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்தான். அவர் நந்தனம் கலைக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். அப்போது எனக்கு பகலில் பார்வை தெரியாது. இரவில் கண் தெரியும். என்னை பெண் பார்க்க வந்த மணமகன் வீட்டாரிடம் என்னைப்பற்றி என் பெற்றோர்கள்

அவர்களுக்கு முன் கூட்டியே தெரியப்படுத்தி விட்டனர். படிப்பை பெரிய விஷயமாக கருதாமல் நிச்சியத்தார்த்தம் நடத்த முடிவு செய்தனர்.

(பகுதி 2 நாளை தொடரும்..)

Interviewed By: J.Karpagam

Media Coverage

Softhelp Educational And Charitable Trust
16, Parrie Street, Mullai Nagar,
Pakamudiyanpet, Pondicherry - 605008, India
Phone: 701-03-123-23
Email: contact@softhelptrust.org
Registration Number: 286/2010

Softhelp was formed on 15th Aug 2007 that envisions an independent lifestyle by bringing sustainable solutions such as AI-enabled devices, standardized skill development in niche technologies, regular health monitoring, pregnant women care support, and rehabilitation for the visually impaired.

UPI: softhelptrust@indianbk
Gpay: 7010312323 (70-103-123-23)
Donations through Softhelp, registered under section 80G of India's Income Tax Act, 1961 are tax-deductible.
© 2007 - 2024 softhelptrust.org, All Rights Reserved
Designed by Beekeeper Design Studio

Welcome to Softhelp Educational And Charitable Trust

X